Wednesday, October 24, 2012

வௌவால்கள் ஒரு அதிசயம் ....................

  வௌவாள்களை கண்டு வியந்த மனிதன் !!!  பயந்தானா? வியந்தானா ?!!




          பாலூட்டிகளான வௌவாள்களை கண்டு வியந்த மனிதன் அதை பற்றி பல்வேறு கதைகள், திரைப்படங்கள், கார்டூன் திரைப்படங்கள் வரை பல்வேறு கோணங்களில் ஆராய்ந்தோ கற்பனையாக வோ பல பரிமாணங்களை கொடுத்திருக்கிறார்கள். பேட் மேன், பேட் உமென் என பல கார்டூன்கள். டிராகுலா (ரத்தக்காட்டேரி) என்றவகையில் பல திரைப்படங்கள் இதைபற்றி எழுத இன்னும் பல பக்கங்கள் ஆகும்.

           உலகத்தில் வௌவாள்கள் 1240 வகைகள் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. இரு தொகுப்பாக பிரித்துள்ளார்கள் மைக்ரோ பேட்ஸ், மெகா பேட்ஸ்.   உணவு உண்ணும் பழக்கத்தை பொருத்து இருவகையாக பிரிக்கப்படுகிறது, 30 சதவீதம் பழந்திண்ணிகள் (வெஜிடேரியன்) 70 சதவீதம் பூச்சியுண்ணிகள்  (நான்வெஜிடேரியன்).  அவற்றில் சில இனங்கள் மீன்,தவளைகளை பிடித்து உண்பவை, சில ரத்தகாட்டேரிகள் ( வேம்பயர்ஸ்)  அல்லது இரத்தம் உறிஞ்சிகள் என வகை பிரிக்கப்பட்டுள்ளன.

          "கிட்டி" என அழைக்கப்படும் பன்றி மூக்கு வௌவாள்கள் அளவில் மிகச்சிறியது  றெக்கையின் நீளம் 15 சென்டிமீட்டர்கள். தங்க கீரிடம் சூட்டிய - பறக்கும் நரி என அடைமொழி கொண்ட மிகப்பெரும் வௌவாளின் றெக்கையின் நீளம் 4 அடி 11 இன்சுகள்.

            இந்த இனமானது இயோசீன் காலத்திலிருந்து அதாவது 52 மில்லியன் ஆண்டுகளாக இருந்து வருகிறது.

கால மாற்றத்திற்கேற்ப தன்னை மாற்றிக்கொண்ட இனங்களே வெற்றிகரமாகத் தொடரும் என்ற கருத்து கவனிக்கத் தக்கது.

             இதனுடைய இரத்த சம்பந்த உறவுக்காரர்கள் டால்பின், நீர்யானை என்று சொன்னால் நம்ப முடிகிறதா?

             அரிய வகை பழந்திண்ணி வெளவாள்கள் சாதாரணமாக கோவை மாநகரின் மையப்பகுதி மற்றும் சுற்றுப்பகுதிகளில் காணமுடிகிறது. மாலை நேரங்களில் சாதாரணமாக கூட்டமாக பறந்து திரிகிறது. குறிப்பாக நேரு ஸ்டேடியம் காந்தி பூங்காவில் இருக்கிறது. பழந்திண்ணி கொட்டை போடாத இடம் ஆர்டிக், அண்டார்டி பகுதி மட்டும் தான்.

            வௌவாள்கள் மீவொலிகளை (ULTRA SONIC) ஒலிக்கச்செய்து கிரகித்து பறக்கிறது. எந்த அளவு துள்ளியம் என்றால் எதிரில் ஒரு கொசுவோ அல்லது மயிரிழையோ இருப்பதாக கொண்டால் அதன் மீது இமைப்பொழுதில் மோதாமல் செல்லும்.

             அவை கண்பார்வை அற்றவை அல்ல ஆனால் சற்று மந்த பார்வை உடையவை. அதற்கு பதிலாக மீவொலிகளை எதிரொலிகளாக கிரகித்து இமேஜை தத்ரூபமாக அதன் மூளையினால் உணர முடியும்.  பறவைகளிடையே போட்டியினைத் தவிர்க்கவே அவை இரவில் உணவு தேடுகின்றன.  அதன் பயணம் சில சமயம் 800 கிலோ மீட்டர்களுக்கு தொடர்கிறது. சில வகை அல்ட்ரா வயலட் ஒளி சிதறல்களை உணரும் சக்தி படைத்தவை. கூட்டங்கள் வெவ்வேரானாலும் இவை சப்தங்களிலே உரையாடல் நிகழ்த்துகின்றன.

            இவை பூச்சி இனங்களை கட்டுப்படுந்தும் மாபெரும் காரணியாக திகழ்கிறது. உதாரணமாக ஆயிரம் வௌவாள்கள் கொண்ட ஒரு கூட்டமானது வருடத்தில் நான்கு டண் பூச்சிகளை சுவாகா செய்து விடுகிறது. 

            இருட்டு மற்றும் ஈரப்பதமுள்ள பகுதிகளில் வசிக்க விரும்புகிறது. இருந்தாலும் எல்லா வகைகளுக்கும் குகைப்பகுதிகள் தேவை இல்லை. பாழடைந்த  கட்டிங்கள்,  கோயில் மாடங்கள், பெரிய மரங்கள் இதன் வசிப்பிடங்கள்.

           பெரிய குகைகளில் வாழும் இவற்றின் கூட்டத்தின் மொத்த உறுப்பினர்கள் கிட்ட தட்ட ஒரு மில்லியன்.  இதன் பிறப்பு விகிதம் குறைவு தான்.  தாய் வௌவாள்கள் குட்டியை ஆறு அல்லது எட்டு வாரங்கள் நன்றாக பறந்து இறையைபிடிக்கும் வரை கூடவே இருந்து கவனித்துக் கொள்ளும்.

          மழைக்காலங்களில் இவை வெளியில் பறப்பதில்லை அந்த சமயங்களில் இதன் மீவொலி எதிரொலிப்பதில் இவைகள் கிரகிப்பதில் பிரச்சிணை உண்டு என்பதால். 

        பலவகை பெயர்கள் : -  படிக்கும் போது இறுதியில் வௌவாள் என கூட்டிப்படிக்கவும்.


             கத்திமுனை வால், தனிமுனை வால், புகை கக்கும், உரிஞ்சியுண்ணும், புனல்காது, அகண்டறெக்கை, பேய்முக, எலிமுக,நியூஜிலாந்து -குட்டைவால், புல்டாக்(மீன்பிடிப்பவை), இலைமூக்கு, பொய்முக ரத்தக்காட்டேரி, கண்குலி முக, லாட முக, நீர்யானைமுக,கிட்டி பன்றிமுக, அந்திமாலை, இருட்டுமுக, இன்னும்பல..(இத்தனை ஆங்கில படங்களுக்கு கதை கொடுத்த ஜீவன்கள்)

            டெக்சாஸ், ஓக்லகோமா,(மெக்சிகன் நீளவால் வௌவாள்), வர்ஜினியா (பெரியகாதுடைய வௌவாள்) போன்ற அமெரிக்க மாகாணங்கள் வௌவாள்களை சின்னமாக கொண்டுள்ளன.

செவ்வாய் கிரகம் பற்றிய சில தகவல்கள் :




செவ்வாய் இதர கிரகங்களுடன் ஒப்பிடும் போது இதில் குடியேறும் வாய்ப்பு அதிகம்.  பூமியை விட சிறியது.  தன்னைத்தானே சுற்ற 24.6 மணி நேரம் எடுத்துக்கொள்கிறது. இதனுடைய ஒரு ஆண்டு என்பது  687 நாட்கள் அதாவது இது சூரியனை சுற்ற எடுத்துக்கொள்ளும் நாட்கள்.  இதன் வெப்பநிலை -25 டிகிரி சென்டிகிரேட்.  மெலிதான காற்று மண்டலம் உண்டு. செவ்வாய் ரோமானியர்களின் போர் கடவுள்.

இதனுடைய துணைக்கோள்கள் , அதுதான் நிலவுகள் இரண்டு உண்டு. ஒன்றன் பெயர் தைமோஸ் [ரோமானிய பெயர் அர்த்தம் பயம்] மற்றது போபோஸ் [ரோமனில் அவசரம்]  இரண்டும் எதிர் எதிர் திசையில் சுற்றுபவை.

போபோஸ் நமது சூரிய குடும்பத்தை சேர்ந்தது அல்ல என்கிறார்கள் அதாவது வேறு கேலக்ஸியை சேர்ந்தது. செவ்வாயினால் ஈர்க்கப்பட்டு அதை சுற்றி வருவதாக நம்பப்படுகிறது.  செவ்வாயிற்கும் இதற்கும் இடைப்பட்ட தூரம் வெரும் 5800 கிலோமீட்டர்களே.  நம் நிலவுக்கும் பூமிக்கும் இடைப்பட்ட தூரம் 4 லட்சம் கிலோமீட்டர்கள்.

நம் நிலவிற்கும் இந்த நிலவிற்கும் [போபோஸ்] உள்ள வேற்றுமை நம்நிலவு சிறிது சிறிதாக பூமியை விட்டு விலகுகிறது;  இது சிறிது சிறிதாக செவ்வாயை நோக்கி செல்கிறது. அதாவது போபோஸ் 100 மிலியன் ஆண்டுகளில் அதனுடன் மோதி சிதறிவிடும்.

நம் நிலா 4 செ.மீ தூரம் விலகி செல்கிறது பல கோடி ஆண்டுகளில் பூமியை விட்டு விலகி சென்றுவிடும்.  [ இருந்துட்டு போகட்டுங்க 2012 முடியரதுக்குள்ளேயே உலகம் அழிஞ்சி போயிடுங்க ....என்று சிலர் சொல்லிக்கிறாங்க...நம்பாதீங்க.]

செவ்வாயில் ஸ்பிரிட் ரோவர் எனும் ரோபோ 2004 லேயே தரையிரங்கி உள்ளது. தண்ணீர் ஆய்வில் இறங்கியது. இது பல புகைப்படங்களை எடுத்து அனுப்பியது. விஞ்ஞானிகள், இது தரை இறங்கியதை "ஆறு நிமிட அற்புதம்" என்று சொன்னார்கள்.


செவ்வாயில் மனிதன் மற்றும் செவ்வாய் கிரகம் பற்றிய சில தகவல்கள்



ஆகஸ்ட் 6ல் செவ்வாயில் தரை இறங்கிய நாசாவின் செல்லகுட்டி "கியூரியாசிட்டி ரோவர்" ஏலியன்ஸ் குறித்தும் ஆராய தரையிரங்கியுள்ளது. இதற்கான செலவு கிட்டத்தட்ட 2.5 மிலியன் டாலர்கள்.  இதை உருவாக்கிய ஆய்வகம் MSL [Mars Science Laboratory ] என அழைக்கப்படுகிறது. இது இதற்கு முன் இவ்வளவு பெரிய சிரத்தை எடுத்து கொண்டிருக்காது. MSL விஞ்ஞானிகளால் துள்ளியமாக கணித்து செயல் படுத்தப்பட்ட "அந்த ஏழு டெரர் நிமிடங்கள்" மிகுந்த சுவாரஸ்யம் மிக்க தருனங்கள்.


க்யூரியாசிட்டியி வேதியல் லேப், எக்ஸ்ரே ஸ்கேனர், லேசர் கருவிகள் இணைக்கப்பட்டுள்ளது இதன் மூலம் மண்சத்து மூலக்கூறுகளை மற்றும் அக்காலம் இக்காலம் குறித்த ஆய்வு பணி செய்யப் போகிறது.

இந்த வெற்றி இன்று நேற்று செய்யப்பட்ட ஆய்வின் முயற்சி அல்ல கடந்த 50 ஆண்டுகாலப் போராட்டம்.

செவ்வாய் குறித்த ஆய்வில் ஈடுபட்ட நாடுகள் USSR, RUSSIA, NAZA, JAPAN, ESA, CHINA


1962 முதல் செவ்வாய் ஆய்வுகோள் ஸ்புட்னிக் 24 [USSR]
1971 மார்ஸ் 2 ஆர்பிட்டர்
1975 வைகிங் 1 மற்றும் 2
2003 மார்ஸ் எக்ஸ்பிரஸ் [ESA]
2003 மார்ஸ் ரோவர் ஸ்பிரிட்
2011 க்யூரியாசிடி ரோவர்

வல்லரசாக தம்மை இனம் காட்ட முயற்சிக்கும் நாடுகள் பலவும் செவ்வாய் ஆய்வில் இன்னும் பல திட்டங்களில் ஈடு படப்போகிறது.

[ESA] ஐரோபிய ஸ்பேஸ் ஏஜென்சி 2016 ல் ஒரு செவ்வாய் சுற்றுவட்ட கோளையும்  2018 தரை உளவியும் [ரோவர் ]அனுப்ப திட்டம் வைத்துள்ளது.

ரஷ்யன் பெடரல் ஸ்பேஸ் ஏஜென்சி ESA உடன் இணைந்து 2018 ல் கியூரியாசிட்டிபோல " EXOMARS " எனும் ஒரு ரோவரை இறக்க திட்டமிட்டுள்ளது.  இது செவ்வாய் தரையினுள் துளையிட்டு  படிமங்களை சேகரிக்கும் இதைகொண்டு 3 பில்லியன் வருடங்களுக்கு முந்தய கதையை தோண்டப் போகிறார்கள்.


இந்தியன் ஸ்பேஸ் ஏஜென்சியிடமும் ஒரு திட்டம் உண்டு 2013ல் செவ்வாய்ச்சுற்றி [ஆர்பிட்டரை] அனுப்பும் திட்டம் தான் அது.

சீனா ரஷ்யா இதேபோல் திட்டங்களை வைத்துள்ளது. 

ரஷ்யா இதுவரை " MARSJINX "  16 ஸ்பேஸ் கிராப்டுகளை செவ்வாய் திட்டத்திற்காக தொலைத்திருக்கிறது. 

"போபோஸ் கிராண்ட் மிசன் " எனும் திட்டம் ரஷ்யாவால் சென்ற ஆண்டு நவம்பரில் அனுப்ப திட்டமிடப்பட்டு ராக்கெட் கோலாரினால் தோல்வி அடைந்தது.

சைனாவின் யிங்ஹோ-1 [ Yinghuo-1] ரஷ்யாவின் ஸ்பேஸ்கிராப்டின் மூலமாக அனுப்பட்ட திட்டமும் தோல்வியடைந்தது. சைனாவின் அடுத்த கட்ட நடவடிக்கை 2016 ல்.

நாசாவின் மனிதர்களை செவ்வாயை சுற்றி வரும் திட்டமும் உண்டு. இதற்கென MAVEN  எனும் ஆர்பிட்டர் 2013 ல் அனுப்பபோகிறது. அதற்கு முன் LEMUR எனும் ஆய்வுக்கோள் அனுப்பி சூழ்நிலை தகவமைப்பை ஆராயும். அதே போல "போபோஸ்" செவ்வாய் நிலவையும் ஆய்வு செய்யப்போகிறார்கள்.

SMALER என்பது தேர்ந்தெடுத்த செவ்வாய் சைட்டுகளில் இருந்து சாம்பில் எடுத்து வரும் முயற்சி.

செவ்வாய்க்கு மனிதனை அனுப்பு திட்டம் அதிக செலவு பிடிக்கும் திட்டம். தற்போதைய டெக்னாலஜியில் முன்னேற்றம் கண்டு இது 2023 இல் நிறைவேற்றப்படும்.

இதற்கிடையில் கலிபோர்னியாவில் ஒரு தனியார் அமைப்பும்    வருங்காலத்தில் அதாவது 15 அல்லது 20 வருடங்களுக்குள்ளாக மனிதனை அங்கே இறக்கும் திட்டம் [" SPACEX " ] வைத்திருக்கிறது இதை உறுதியாக செயற்படுத்தப்போகிறோம்  என்கிறார் நிறுவனர் எலோன் முஸ்க்.

Friday, March 30, 2012

டெனிஸ் மிர்சா ஒரு பார்வை ........................


விளையாட்டு துறை பத்திரிகையாளரான இம்ரான் மிர்சாவிற்கும் தாயாகிய நசிமாவிற்கும் மும்பையில் சானியா மிர்சா பிறந்தார். அவர் ஹைதராபாதில் ஒரு ஷியா முஸ்லிம் குடும்பத்தில் வளர்க்கப்பட்டார்.மிர்சா தனது ஆறாம் வயதில் டென்னிஸ் விளையாடத் தொடங்கி 2003ம் ஆண்டு டென்னிஸ் விளையாட்டை தொழிலாக்கிக் கொண்டார்.
அவர் தனது தந்தையாலும் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களாலும் டென்னிஸ் விளையாட்டில் பயிற்சி அளிக்கப்பட்டார். அவர் முதலில் ஹைதராபாதில் உள்ள நாசிர் பள்ளியில் படித்து பின்னர் செயின்ட் மேரிஸ் கல்லூரியில் பட்டம் பெற்றார்.2003ம் ஆண்டு ஏப்ரல் மாதம் மிர்சா இந்திய பிடேறேஷன் கோப்பை குழுவில் சேர்ந்து அனைத்து மூன்று ஒற்றையர்கள் ஆட்டங்களிலும் வெற்றி பெற்றார். 2003ம் ஆண்டில் நடந்த விம்பிள்டன் மகளிர் இரட்டையர் விளையாட்டில் ரஷ்யாவை சேர்ந்த அலிசா க்லேய்போனவுடன் ஜோடி சேர்ந்து விளையாடி பட்டம் பெற்றார்.
மகளிர் டென்னிஸ் விளையாட்டு வீராங்கனைகளில் மிர்சா இந்தியாவிலிருந்து ஒற்றையர் விளையாட்டில் 27ம் தர வரிசையிலும் இரட்டையர் விளையாட்டில் 18வது தர வரிசையிலும் அடைந்து,மிக அதிகப் படியான தர வரிசையில் இடம் பெற்றவராவார். அவர் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் விளையாட்டுப் போட்டித் தொடரில் இந்தியாவில் முதல் பெண்மணியாக வித்திட்ட நற்பெயரை கொண்டுள்ளார்.

Tuesday, March 27, 2012

.மஹேல ஜயவர்தன முப்பதாவது சதம்

இலங்கை அணியின் தலைவர் மஹேல ஜயவர்தன தனது கிரிக்கெட் வாழ்க்கையில் 30 ஆவது சதத்தை எடுத்துள்ளார்.
இலங்கைக்கான விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருக்கும் இங்கிலாந்து அணிக்கு எதிராக காலி மைதானத்தில் திங்கட்கிழமை(26.3.12) தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டியின் முதலாம் நாள் ஆட்டத்தின் போதே ஜயவர்தன இந்தச் சாதனையை படைத்தார்.
முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் இலங்கை அணி எட்டு விக்கெட்டுகள் இழப்புக்கு 289 ஓட்டங்களை எடுத்துள்ளது. மஹேல ஜயவர்தன 168 ஓட்டங்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருக்கிறார்.
தனது 129 ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடிவரும் மஹேல ஜயவர்தன அதில் 10,000 க்கும் அதிகமான ஓட்டங்களை எடுத்துள்ளார். 1997 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், இந்திய அணிக்கு எதிராக கொழும்பிலுள்ள ஆர்.பிரேமதாஸ விளையாட்டரங்கில் தனது டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையை அவர் தொடங்கினார்.
2006 ஆம் ஆண்டு ஜூலை மாதம் கொழும்பிலுள்ள எஸ்எஸ்ஸி விளையாட்டு மைதானத்தில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக விளையாடிய டெஸ்ட் போட்டியில் அவர் 374 ஓட்டங்களை எடுத்தார். டெஸ்ட் போட்டிகளில் அவர் எடுத்த அதிகபட்ச ஓட்டங்களும் அதுவே.
இங்கிலாந்து அணிக்கு எதிராகவே ஆவர் அதிகபட்ச சதங்களை எடுத்துள்ளார்.
இதுவரை டெஸ்ட் போட்டிகளில் அடித்துள்ள 30 சதங்களில் 7 இங்கிலாந்து அணிக்கு எதிராக அடிக்கப்பட்டவை. அடுத்து இந்தியாவுக்கு எதிராக 6 சதங்களும், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 5 சதங்களும் அவர் அடித்துள்ளார்.
ஒரு நாள் போட்டி ஒன்றில் மஹேள ஜெயவர்தன
வங்கதேசத்துடன் நான்கு சதங்களும், நியூசிலாந்து அணிக்கு எதிராக மூன்று சதங்களும் அடித்துள்ள மஹேல ஜயவர்தன, ஆஸ்திரேலிய அணியுடன் ஆடும்போது இரண்டு சதங்களும், மேற்கிந்திய தீவுகள், பாகிஸ்தான் மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு எதிராக ஒரு சதமும் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சராசரியாக டெஸ்ட் போட்டிகளில் அவர் 51 ஓட்டங்களை பெற்றுள்ளார். இலங்கை அணிக்கு இதற்கு முன்னரும் அவர் தலைமையேற்றிருந்தார்.
டெஸ்ட் போட்டிகளில் இலங்கை அணியின் சார்பில் அதிகபட்ச சதங்களை அடித்துள்ளவரும் மஹேல ஜயவர்தன தான்.
இது தவிர 373 ஒருநாள் போட்டிகளிலும் அவர் விளையாடி பத்தாயிரத்துக்கும் அதிகமான ஓட்டங்களை எடுத்துள்ளார்

Sunday, March 18, 2012

தனது வளர்ச்சியை நிறுத்திய உலகின் உயரமான மனிதர்

துருக்கி நாட்டைச் சேர்ந்த சுல்தான் கோசென்(Sultam Kosan) கடந்த 2011ம் ஆண்டில் உலகின் உயரமான மனிதராக கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார். எட்டு அடி 3 அங்குலம் உயரமாக இருந்த கோசென் Acromegaly என்ற வளர்ச்சி நோயின் காரணமாக பிறந்தது முதல் இன்று வரை வளர்ந்து கொண்டே இருந்துள்ளார். இவரின் இந்த வளர்ச்சிக்கு பிட்யூட்டரி சுரப்பியில் ஏற்பட்டுள்ள கட்டிதான் காரணம் என்று கண்டறியப்பட்டுள்ளது.இதனையடுத்து சுவீடன் நாட்டில் தயாரான ஒரு மருத்துவக்கருவியை அறுவைச் சிகிச்சையின் மூலம் மருத்துவர்கள் கோசெனின் கபாலத்திற்குள் செலுத்தி பிட்யூட்டரி சுரப்பியில் உள்ள கட்டியை அகற்றியுள்ளனர்.
எனவே இவர் இனி வளர வாய்ப்பில்லை என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஊடகங்கள் இந்த மருத்துவ சிகிச்சை பற்றிய விபரங்களை பொது மக்களுக்கு வெளியிட்டுள்ளது.கோசென் தற்போது வளரவில்லை என்பதை வெர்ஜினியா பல்கலைக்கழக அதிகாரிகளும் உறுதி செய்துள்ளதால் இந்த சிகிச்சை குறித்த விவரங்களும் கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் இது குறித்து வெர்ஜினியா பல்கலைக்கழகத்தின் மூளை அறுவை சிகிச்சை நிபுணரான ஜேசன் ஷீஹான்(Jason Sheehan) கூறுகையில், இந்தச் சிகிச்சை நல்ல பலன் அளித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

Thursday, March 1, 2012

SMS வழியாக பேஸ்புக்கை உபயோகிப்பதற்கு


மொபைல் எண்ணை பதிவு செய்வது எப்படி: 
முதலில் உங்களின் பேஸ்புக் கணக்கில் நுழைந்து கொள்ளுங்கள். அதில் Account Settings பகுதிக்கு செல்லுங்கள்.
அடுத்து உங்களுக்கு இன்னொரு விண்டோ திறக்கும் அதில் Mobile என்பதை கிளிக் செய்யுங்கள்.
பிறகு வரும் விண்டோவில் Add a Phone என்ற பட்டனை கிளிக் செய்யவும். அடுத்து ஒரு விண்டோ ஓபன் ஆகும்.
முதலில் நீங்கள் வசிக்கும் நாட்டினை தேர்வு செய்து கொண்டு அடுத்து கீழே உள்ளதி உங்கள் மொபைலின் Service Provider தேர்வு செய்து கொள்ளுங்கள்.
ஒருவேளை உங்களுடைய Service Provider அந்த பட்டியலில் இல்லை என்றால் Other Carrier என்பதை தேர்வு செய்து கொள்ளுங்கள்.
Next பட்டனை அழுத்தவும். இன்னொரு விண்டோ திறக்கும்.
இப்பொழுது உங்கள் மொபைல் போனில் F என டைப் செய்து அங்கு கொடுத்திருக்கும் எண்ணுக்கு SMS அனுப்புங்கள். (ஒவ்வொரு நாட்டிற்கும் மொபைல் எண் வேறுபடும்)
நீங்கள் SMS அனுப்பிய உடனே உங்களுக்கு ஒரு பதில் SMS வரும் அதில் உள்ள Confirmation code குறித்து கொண்டு இங்கு கொடுக்கப்பட்டிருக்கும் கட்டத்தில் கொடுக்கும் மற்றும் உங்களுடைய மொபைல் எண் மற்றவர்களுக்கு தெரிய கூடாது என்றால் Share my mobile number with my friends என்பதில் உள்ள டிக் மார்க் நீக்கி விட்டு Next பட்டனை அழுத்தவும்.
அவ்வளவு தான் உங்களின் மொபைல் எண் பேஸ்புக்கில் பதிவு செய்யப்பட்டு விடும். மற்றும் அதில் உள்ள settings உங்களுக்கு தேவையான படி மாற்றி வைத்து கொள்ளுங்கள்.
இனி நீங்கள் பதிவு செய்யப்பட மொபைல் SMS வழியே பேஸ்புக்கை உபயோகிக்கலாம்.
SMS வழியாக பேஸ்புக்கை உபயோகிக்கும் முறை: 
மொபைல் SMS மூலம் உபயோகிக்க கீழே உள்ள முறைகளை பயன்படுத்தவும். பேஸ்புக் சுவரில் எழுத சாதரணமாக SMS டைப் பண்ணி முன்பு குறிப்பிட்ட எண்ணுக்கு அனுப்பினால் போதும் சுவரில் அப்டேட் ஆகிவிடும்.
புதிய நண்பரை சேர்க்க – add your friend name.
Subcribe செய்ய – Subscribe your friend name.
வளர்ந்து விட்ட தொழில் நுட்பத்தில் எல்லாமே சுலபமாகி விட்டது. பிரபல சமூக தளமான பேஸ்புக் தளத்தில் பல எண்ணற்ற வசதிகள் கொடுத்துள்ளனர்.
அதில் ஒரு முக்கியமான வசதியாக கணணி இல்லாமல் இணைய இணைப்பு இல்லாமல் மொபைல் SMS வழியாக பேஸ்புக்கை உபயோகிக்கலாம்.
இதற்கு முதலில் உங்கள் மொபைல் எண்ணை பேஸ்புக்கில் பதிவு செய்ய வேண்டும்.

இதயமின்றி உயிர்வாழும் உலகின் முதலாவது மனிதன்


இதயத்தில் ஏற்பட்ட மாற்றமுடியாத நோயினால் தனது வாழ்நாளின் இறுதிக்கட்டத்தில் வாழ்ந்து கொண்டிருந்த கிரே லெவிஸ் எனும் 55 வயதுடைய மனிதர் இன்று இதயமே இன்று புத்துணர்வுடன் வாழ்ந்து வருகின்றார்.
கடந்த வருடம் இருதய நோயினால் பாதிக்கப்பட்டிருந்த குறித்த நபருக்கு டெக்சாசிலுள்ள இருதய நிறுவனத்தில் வேலைசெய்யும் இரு வைத்தியர்களின் முடிவே அவரின் எதிர்காலத்தை தீர்மானித்தது.சிகிச்சையின் போது இதயம் முற்றாக அகற்றப்பட்டு இதயத்தை போலவே செயல்படக்கூடிய “contunuos flos” எனப்படும் செயற்கை உபகரணம் பொருத்தப்பட்டது. இந்த உபகரணம் இதயம் போன்று துடிப்பதில்லை எனினும் இதயத்தை போன்றே அனைத்து செயல்பாடுகளையும் மேற்கொள்ளவல்லது.

ஒருவரை கொலைசெய்து கண்களையும் மூளையையும் தின்ற கொடூர மனிதன்



அமெரிக்காவின் கனெடிகட் மாநிலத்தில் நபரொருவரைக் கோடரியினால் தாக்கி அவரது மூளையை உட்கொண்ட நபருக்கு மனநல பரிசோதனை செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டரி லிங்கோன் ஸ்மித் (35) என்ற நபரே இக்கொலையுடன் தொடர்புபட்டவராவார். இவர் கடந்த டிசம்பர் மாதம் 15 ஆம் திகதி ஏஞ்சல் கொன்சாலிஸ் என்பவரைக் கொலை செய்து அவரது மூளையையும், கண்களையும் உண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அருகில் உள்ள சுடுகாடொன்றில் வைத்தே இவற்றை உட்கொண்டுள்ளதாகக் குற்றவாளி தெரிவித்துள்ளார். இக்குற்றவாளி நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.  ஸ்மித்தை மனநல பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டுமென இவர் சார்பில் ஆஜராகிய வழக்கறிஞர் வாதிட்டதாலேயே நீதிபதி இவ் உத்தரவை வழங்கியுள்ளார்.
இவ்வழக்கு இம்மாதம் 14 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இவருக்கு 60 வருடங்கள் வரை சிறைத்தண்டனை வழங்கப்படலாம் எனவும் இவரை விடுதலை செய்ய நேர்ந்தால் அது சமூகத்துக்கு பாரிய அச்சுறுத்தல் எனவும் அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர்.

அமெரிக்க தேவாலயத்தில் மகாத்மா காந்திக்கு ஞானஸ்தானம்



தேசத்தந்தை என்று அழைக்கப்படும் மகாத்மா காந்தி அவர்களுக்கு அமெரிக்காவில் சால்ட் லேக் நகரில் உள்ள மர்மோன் தேவாலயத்தில் ஞானஸ்நானம் செய்யப்பட்டது தெரிய வந்துள்ளது.
அவர் இறந்து பல ஆண்டுகள் கழித்து கடந்த 1996-ம் ஆண்டு இதை செய்துள்ளனர். இந்த தகவலை அமெரிக்காவில் உள்ள ரட்கி என்பவருக்கு மர்மோன் தேவாலயம் தற்போது தெரிவித்துள்ளது. இதை இந்து மத ஆர்வலர் ராஜன் செத் என்பவருக்கு ரட்கி மின்னஞ்சல் மூலம் தெரிவித்துள்ளார்.மேலும் காந்திக்கு ஞானஸ்நானம் செய்வித்தது தொடர்பான ஆவணங்களை மர்மோன் தேவாலயத்தில் கடந்த 16-ந் திகதி, தான் பார்த்ததாகவும் அதன்பிறகு அந்த ஆவணங்கள் காணாமல் போய் விட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

மறைந்த இந்திய தலைவர் ஒருவர், பதிலி முறையில் ஞானஸ்நானம் செய்யப்பட்ட சம்பவம், உலகம் முழுவதும் இந்துக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அமெரிக்காவில் வசித்து வரும் மகாத்மா காந்தியின் பேரன் அருண் காந்தியும் இச்செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

கொடிய விஷப் பாம்பை காலை உணவாக்கிய சிலந்தி



பாம்பென்றால் படையும் நடுங்கும் என்பது பழமொழியாகும். இதற்கு காரணம் தீண்டியவுடன் மனிதர்கள் இறக்க நேரிடும்.
இப்படிப்பட்ட கொடிய விஷம் கொண்ட பாம்பு ஒன்றை சிலந்தி ஒன்று தனது காலை உணவாக்கியுள்ளது.
இச்சம்பவமானது தென்னாபிரிக்காவில் இடம்பெற்றுள்ளது. தான் இடம் விட்டு இடம் நகரவும் எதிரிகளை சிக்க வைக்கவும் தனது வாயிலிருந்து வெளிவரும் ஒருவகை திரவத்தின் மூலம் உருவாக்கப்படும் வலை மூலமே அந்த பாம்பை சிலந்தி சிக்க வைத்துள்ளது.

காற்றில் மிதக்கும் அதிசயக் குழந்தைகள்


பிரபல புகைப்படக் கலைஞர் ஒருவர் தனது கற்பனைத் திறனைக் கருவாகக் கொண்டு குழந்தைகளை வைத்து மிகவும் அழகான முறையில் புகைப்படங்களை வடிவமைத்துள்ளார்.
நியூயார்க் மாநகரத்தின் Rachel Hulin நகரில் அமைந்துள்ள மலைகள், நுாலகம், வீட்டின் சமையல் அறைகள் ஆகியவற்றில் குழந்தைகள் காற்றில் மிதப்பது போன்று புகைப்படத்தினை வடிவமைத்து பார்க்கும் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார் இந்த புகைப்படக் கலைஞர்.








இந்தப்புகைப்படங்களை பிரபல ஆங்கில நிறுவனம் விளம்பரம் செய்ய முன்வந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.

புடவை கட்டினால் கேன்சர்



நீங்கள் காலம் காலமாக புடவை கட்டுபவரா அப்படியானால் அடுத்த முறை புடவை கட்டும்போது மிகவும்  கவனமாகக் கட்ட வேண்டும். காரணம் இருக்கிறது… உள்பாவாடை நாடாவை இறுக்கிக் கட்டுவதால் தோல் பாதிக்கப்பட்டு புற்றுநோய் வரக்கூடும் என்று எச்சரிக்கிறது இந்தியன் மெடிக்கல் அசோசியேஷன் ஆய்வு.
இப்பிரச்னையால் 3 பெண்கள் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவதாக இன்னொரு குண்டு போட்டுள்ளார் மும்பை கிராண்ட் மருத்துவக்கல்லூரி பேராசிரியர் ஜி.டி.பாக்ஷி புடவை கட்டினால்கூட புற்றுநோய் தாக்குமா, என்ன ஆச்சரிய அதிர்ச்சியோடு சரும சிகிச்சை நிபுணர் முருகுசுந்தரத்தை அணுகினோம்.
தமிழ்நாட்டில் 70 சதவிகித பெண்களின் பாரம்பரிய உடை புடவை. பண்டிகை, திருமணம் போன்ற விசேஷங்களுக்கு புடவை கட்டுவது காலம் காலமாக சம்பிரதாயம். புடவை நழுவாமல் இருக்க உள்பாவாடையை இறுக்கிக் கட்டுவது வழக்கம்.
அதனால் இடுப்பு பகுதியில் தழும்பு அல்லது சருமம் கருப்பாக மாறுமே தவிர, என் மருத்துவ அனுபவத்தில் சேலை புற்றுநோய் பாதிப்பை கேள்விப்பட்டது கிடையாது. தழும்பு மற்றும் சரும பிரச்னை உள்ளவர்கள், பாவாடை நாடாவை தளர்வாகக் கட்டிக் கொள்ளலாம்.
மெல்லிய நாடாவுக்கு பதில் பட்டை போல வைத்துக்கொண்டால், தழும்பு ஏற்படாது. ஒரே இடத்தில் கட்டாமல், பாவாடை முடிச்சை மாறி மாறி கட்டலாம் என்கிறார்.
பொதுவாக மார்பகம் மற்றும் கர்ப்பப்பை புற்றுநோய் பெண்களை அதிகம் பாதிக்கும் நோய். புடவை கட்டுவதால் இடுப்புப் பகுதியில் புற்றுநோய் ஏற்படும் என்பது புதிய தகவல். அந்த பிரச்னையோடு இதுவரை யாரும் வந்ததில்லை. சிலருக்கு சருமத்தில் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டு இருக்கலாம்.
பாதிக்கப்பட்ட பகுதியை  பாவாடை நாடா கொண்டு இறுக்கும்போது, நோயின் தன்மை வெளிப்பட்டு இருக்கும் என்கிறார் சென்னை புற்றுநோய் மையத்தின் புற்றுநோய் நிபுணர் டாக்டர் சாகர்.
புடவை பெண்களுக்கு டாக்டர் டிப்ஸ்
பாவாடை நாடாக்களை இறுக்கிக் கட்டக்கூடாது.
பாவாடை நாடாவை மெல்லிய கயிறால் கட்டாமல் பட்டையான கயிறு கொண்டு கட்டலாம்.
பாவாடைக்குக் கயிறு பயன்படுத்தாமல், பட்டையாக பெல்ட், லூப் போல தைத்துக் கொள்ளலாம். நாடா பட்டையாக இருப்பதால் அழுத்தம் மற்றும் தழும்பு ஏற்படாது.
ஒவ்வொரு முறை புடவை கட்டும்போது பாவாடை முடிச்சை வலது, இடது என மாற்றி கட்டிக் கொள்ளலாம்.
சருமத்தில் தழும்பு ஏற்பட்டால் உடனடியாக சரும நிபுணரை அணுகவேண்டும்.

மக்கள் உரிமையை மறுக்கும் வினோத கிராமம்



உத்தர பிரதேசத்தில் உள்ள ஒரு கிராமத்தில் பெண்களுக்கு இது நாள் வரை ஓட்டு போட உரிமை அளிக்கப்படாமல் உள்ளது.மேலும் ஓட்டு போடுவது ஜனநாயகக் கடமை என கூறப்பட்டு வரும் நிலையில் இந்த மாநிலத்தின் லக்கிம்பூர் கெரி மாவட்டத்தின் செருவா கிராமத்தில் பெண்கள் ஓட்டளிக்க அனுமதிக்கப்படாத நிலை காணப்படுகிறது. சுதந்திரம் அடைந்த நாள் முதல் இந்த கிராமத்தில் தேர்தல் நடைபெறும் போதெல்லாம் பெண்களை ஓட்டு போட அனுமதிப்பதில்லை.
இந்த வினோத நடவடிக்கை குறித்து கிராம பெரியவர் நசீர் கானிடம் கேட்ட போது, தேர்தல் நேரத்தில் கிராமத் தலைவர் எங்களை அழைத்து யாரெல்லாம் ஓட்டு போடப் போகிறீர்கள். யாரெல்லாம் உங்கள் வீட்டு பெண்களை ஓட்டு போட அனுப்பப் போகிறீர்கள் என கேட்பார். நாங்களும் வழக்கப்படி பெண்களை ஓட்டு போட அனுப்ப மாட்டோம் என சொல்லி விடுவோம் என்றார்.
இந்த கிராம பெண்களிடமும் ஏன் நீங்கள் ஓட்டு போடுவதில்லை என கேட்டால்? ஓட்டு போடாதது எங்களது பாரம்பரியமாக உள்ளது. அதை முன்னோர்களைப் போல நாங்களும் பின்பற்றி வருகிறோம் என்கிறார்கள்.
முஸ்லிம் கிராமம் என்பதால் இந்த சமூக பெண்கள் தான் இப்படி என்றால் இக்கிராம இந்து பெண்களும் ஓட்டு போடுவதில்லை. இது எங்கள் கிராமத்தில் தொன்று தொட்டு இருந்து வரும் பழக்கம் என்கிறார்கள்.
இந்த கிராமத்தை சேர்ந்த பார்கவா என்பவர் தெரிவிக்கையில், எங்கள் குடும்பப் பெண்கள் மட்டும் ஓட்டு போடுவார்கள். என் மனைவி, மகள், மருமகள் மூன்று பேரையும், ஓட்டு போட நான் அனுமதித்து வருகிறேன். எங்கள் கிராமத்தில் இந்த மூன்று பெண்கள் தான் ஓட்டு போட்டு வருகிறார்கள் என்றார்.

Tuesday, January 3, 2012

மறக்க முடியாத பல அனுபவங்களைக் கொடுத்த இந்தியப்பயணம்………………….



மறக்க முடியாத பல அனுபவங்களைக் ;கொடுத்த இந்தியப்பயணம்…………………..
இந்தியப்பயனத்தில் மறக்கமுடியாத அனுபவங்கள் பலவற்றை சந்தித்தேன் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு புதிய அனுபவம் கிடைத்தன. வுpமானத்தில் பயனித்தது புதிய ஒரு அனுபவத்தை கொடுத்தது. முதல் முதல் பயனித்திருந்தாலும் பயமில்லாமல் நண்பர்களுடன் பயனித்தது மகிழ்சியான அனுபவத்தை கொடுத்தது. சென்னை விமான நிலையத்தில் சென்னை பல்கலைக்கழகத்தில் வரவேற்பு எமது ஆசிரியர் மீது அவர்கள் கொண்ட மரியாதையை வெளிப்படுத்தியது. ஆவரிகளின் வரவேற்பு உபசரிப்பு ஈழமாணவர்கள் என்று அறிமுகப்படுத்திய தமிழ் உணர்வு எம்மை பிரமிக்க வைத்தது.

தொடர்பாடலில் ஆங்கிலமொழியின் அவசியம்





ஆங்கிலம் என்பது இன்று உலகில் பொது மொழியாக அறியப்பட்டுள்ளது. ஆங்கிலம் அந்நியரினால் இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டிருப்பினும் அதன் தேவை இன்று உலகம் முழுவதம் அறியப்பட்டுள்ளது. தொடர்பாடலுக்கு மொழி ஒரு தடையாக உள்ள இடங்களில் ஆங்கிலம் பயன்படுத்தப்படுகின்றது.
ஆங்கிலேயர் தமது மொழி ஆற்றலினாலும் விடாமுயற்சியினாலும் வளற்ச்சி அடையாத அங்கிலத்தை உலகம் முழுவதம் பரப்பினர். ஆங்கிலம் இன்று தொடர்பாடலில் அதிகமாகப்பயன்படத்தப்படுவதற்குக் காரணம் அது அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு மொழியாகக் காணப்படுவதாலாகும். ஆயினும் இன்று எத்தனை பேர் அதனை அறிந்து வைத்துள்ளனர்? எனக்கேட்டால் மிகக்குறைந்த அளவினரே இருப்பர். கிராம மட்டங்களில்  ஆங்கிலமே தெரியாத எத்தனையோ பேர் இருப்பார்கள். இன்றும் பல கிராமமட்ட பாடசாலைகளில் ஆங்கிலம் கற்பிக்கப்படாத நிலையும் காணப்படுகின்றது. ஆங்கில ஆசிரியர் பற்றாக்குறையும் காணப்படுகின்றது. ஆனால் நகரங்களில் ஆஙகில மொழி மூலப்;பாடசாலைகள் அதிகமாகக் காணப்படுகின்றன. நகர்ப்புறப் பெற்றோரும் ஆங்கில மொழி மூலக்கற்கைகளையே தமது பிள்ளைகள் பயில வேண்டும் எனவும் விரும்புகின்றனர்.

சிங்காரச் சென்னையில் நான் பார்த்த சிதறிய கோலங்கள்




அடுக்கு மாடிக்கட்டிடங்கள் நிறைந்த சென்னை மாநகரத்தில் அடிப்படை வசதிகள் அற்ற ஒர் இடமாக பம்ஸ்ரிங் ஸ்ரேசன் அமைந்திருந்தது. அந்த இடத்தில் நுழைவாயிலே அம் மக்களின் வாழ்க்கை  நிலையினை பிரதிபலித்திருந்தது. ஒடுக்கமான வீதியின் இரு பக்கமும் வீடுகள் அமைந்திருந்தன. வீடுகளின் வாசல்களில் கழிவுப்பொருட்களும் வாய்க்கால்களுமே இருந்தன .பெருமளவு சுகாதார சீர்கேடுகளை அம் மக்கள் தினமும் எதிர் கொள்கின்றனர் என்பதை உணர்த்தியது. ஆம் மக்களுடன் சில நிமிடங்களே உரையாடினோம்.  30 வருடங்களாக அங்கேயே வசிப்பதாக அறிந்தோம். சில குடும்பங்களில் நாளாந்த வருமானம் 30 ரூபா முதல் 70 ரூபா வரை உள்ளதாக கூறினார். ஓவ்வொரு வீடுகளிலும் ஆண்கள் மட்டுமே வேலைகளுக்கு செல்கின்றனர் பெண்கள் வேலைக்கு செல்வதை விரும்புவதில்லை பெருமளவில் படித்திருக்கவிலலை. ஆண்கள் தமது பிள்ளைகள் படிக்கவேண்டும்  என்பதில் ஆர்வம் காட்டுகின்றனர். B.s.c .B.comபடித்த பத்துப்பேர் அங்கே இருக்கின்றனர். 350 வீடுகள் அங்கே இருப்பதாகவும் 600 குடும்பங்களை சேர்ந்த 3500 மக்கள் அங்கே வசிப்பதாகவும் கூறினர்.

இயல்பு நிலைக்கு திரும்புமா வசந்தபுரம் மக்களின் வாழ்வு நிலை??




அரியாலையில் வசந்தபுரம் கிராமமக்களுக்கான மீள்குடியேற்றம் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.
  சொந்த இடங்களில் மீள் குடியேறிய மகிழ்ச்சியை மட்டுமே மூலதனமாகக் கொன்டு தமது இருப்பிடங்களுக்கு விட்ட மகிழ்ச்சியில் குடியேறிய அரியாலை வசந்தபுரம் மக்களுக்கு ஏமாற்றமே காத்திருந்தது.
1990களில் உள்நாட்டு யுத்தம் காரணமாக தமது இருப்பிடங்களைவிட்டு புலம் பெயர்ந்து; சென்ற மக்கள் இந்தியாவிலும் இலங்கையின் பல் வேறு பகுதிகளிலும் குடியேறினர் தமது சொத்துக்களில் பெரும் பகுதியையே இழந்த மக்கள் 20 வருடங்களின் பின்னர் மீண்டும் தமது சொந்த இடங்களில் பெரும் எதிர்பார்ப்புகளுடன் குடியேறியுள்ளனர்.

புணரமைப்பும் பழமையழிப்பும்




வடக்கின் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் அண்மைக்காலமாக யாழ்நகர் உள்ளிட்ட இலங்கையின் வடபகுதி முழுவதுமே அபிவிருத்தி செய்யப்பட்டு வருகின்றது.2008ல் ஏற்படுத்தப்பட்ட வடக்கின் அபிவிருத்தி பணிகள் மகிந்த சிந்தனை செயற்திட்டத்தின்  இவ்அபிவிருத்திப்பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அபிவிருத்திப்பணியின் முதற்கட்டமாக யாழ்நகரின் வீதிகள் பெருந்தெருக்கள் வீதி அகலிப்பு அபிவிருத்தி திட்டத்தின் மூலம் அகலமாக்கப்பட்டு புணரமைப்பு செய்யப்படுகின்றன. இதற்காக வீதியின் இருபக்கங்களிலும் குடியிருப்புக்கட்டடங்கள் கடைத்iதொகுதிகள் பலவும் உடைத்தகற்றப்பட்டுள்ளன. மக்களும் அபிவிருத்தியைப்பெற்றுக்கொள்ளும் நோக்கோடு செயற்றிட்டத்திற்கு உதவியிருந்தனர்.வீதிக்கரைகளில் இருந்த பெருமளவிலான பழமை பேசும் நமது சொத்துக்கள் அழிக்கப்பட்டு புதுமைகள் பலவும் வந்து சேர்ந்தன.

எங்களுக்கு நடந்தது தெரியும் ஆனால் சொல்ல மாட்டோம்!




 யாழ்ப்பாணத்தில் தொடர்ச்சியாக இடம்பெறும் குற்றச் சம்பவங்கள் தொடர்பாக யாழ்மக்களிடம் கேட்டபோது எல்லா மக்களிடமும் இருந்து வந்த பதில் “எங்களுக்கு நடந்தது, நடக்கிறது தெரியும் ஆனால் எம்மால் எதுவுமே  சொல்லமுடியாது. ஏங்களை எதுவுமே கேட்க வேண்டாம். நீங்கள் கேட்டிட்டு போய் கண்டபடி எழுதுவீர்கள் பிரச்சனை எங்களுக்குதான்.அது உங்களுக்கு தெரியாது”  இதே பதில்தான் யாழ்நகரின் பல பகுதிகளிலும் எங்களுக்குத் தெரியும் ஆனால் சொல்லமாட்டோம் என்ற பதில்தான் எங்களுக்கு கிடைத்தது. யாழ் நகரின் பல பகுதிகளிலும் எங்களுக்கு கிடைத்தது.
 யாழ் நகரில் அண்மைக்காலத்தில் பெரும்பீதியை ஏற்படுத்திய கிறீஸ் மனிதன் பிரச்சனையால் பெரிதும் பாதிக்கப்பட்ட யாழ் நாவந்துறை பகுதியில் மக்கள் மத்தியில் இருக்கும் பயம் ஓயவில்லை.

ஊடகங்களிடையே மொழிக்கலப்பு


பல சிறப்புக்களை கென்ட தமிழ் மொழி இன்று பல மொழிக் கலப்பினால் பாதிக்கப்பட்டு வருவதாக இன்று பலரும் குற்றம் சுமத்திக்கொண்டு இருக்கின்றனர். தமிழ் மொழியை வளர்ப்பதிலே ஊடகங்களின் பங்கு இன்றியமையாத ஒன்றாகும் ஊடகங்களால் பாரிய மாற்றங்களை ஏற்படுத்த முடியும்.
தமிழ் மொழியோடு பிற மெழி கலப்பதை தடுப்பதிலும், தமிழ் மொழியை வளர்ப்பதிலும் ஊடகங்களின் பங்கு அளப்பெரியது. தமிழ் ஊடகங்கள் தமிழ் மொழியை வளர்ப்பதனையும் தமது நோக்கங்களிலே ஒன்றாக கடைப்பிடிக்க வேண்டும். இன்று பல ஊடகங்களும் ஊடகவியலாளரும் தமிழ் மொழியை வளர்ப்பதிலே ஆர்வம் காட்டிவரும் நேரம் சில ஊடகங்களிலே தமிழ் பயன்பாட்டைப் பார்க்கின்றபோது எல்லோருமே கவலைப்பட வேண்டிய விடயமாக இருக்கின்றது.